districts

img

மயிலாடுதுறையில் சயனைடு கலந்த மது அருந்தி 2 பேர் பலி!

மயிலாடுதுறையில் சயனைடு கலந்த மதுவை அருந்தி பழனி குருநாதன், பூராசாமி ஆகிய இருவர் உயிரிழப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனி குருநாதன், பூராசாமி ஆகிய இருவரும் நேற்று மாலை அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய  சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர் அருகிலிருந்தவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்தாக மருத்துவர் கூறியுள்ளார்.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வு அனுப்பி வைத்து வழக்கும் பதிவு செய்தனர். அவர்கள் அருந்திய மது பாட்டிலை ஆய்வுக்கு உட்படுத்திய போது அதில் சயனைடு கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்